மொழிபெயர்ப்பில் துலங்கும் இலக்கியம்

மொழிபெயர்ப்பில் துலங்கும் இலக்கியம்
Updated on
1 min read

ஈரானிய இயக்குநர்களில் புகழ்பெற்றவர் அப்பாஸ் கியாரஸ்தமி. ‘வேர் இஸ் தி ஃபிரெண்ட்ஸ் ஹோம்’, ‘தி விண்ட் வில் கேரி அஸ்’ போன்ற பல திரைப்படங்களைப் பார்க்காத சினிமா ஆர்வலர்கள் குறைவு. கியாரஸ்தமி ஒரு கவிஞரும்கூட. பாரசீகக் கவிதைப் பண்பாட்டில் தனித்துவமிக்க கவிதைகளை உருவாக்கியிருக்கிறார்.

அவரது கவிதைகள் முதன்முறையாக க.மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் ‘பாயக் காத்திருக்கும் ஓநாய்’ தொகுப்பாக வெளிவந்துள்ளது. எளிமையும் கவித்துவக் காட்சிகளும் நிறைந்தவை இந்தக் கவிதைகள். நான்கு வரிகளில் கவிதைக்கு அருகில் இருக்கும் இந்தச் சொற்கள், ஓர் உணர்வை உருவாக்கி வாசகரை நிச்சலனப்பட வைக்கின்றன. எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தனது ரசனையின் அடிப்படையில் சில கதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in