

கடன் வாங்கி எந்த முதலீடும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தும் இந்த நூலின் ஆசிரியர், கடன் இல்லாமல் வாழ்ந்து, சிறுகச்சிறுகச் சேமிப்பதும் சிறந்த முதலீடுதான் என்று கூறுகிறார். இ.எம்.ஐ. இல்லாத வாழ்க்கைதான் ஒருவரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்லும்.
ஒருவர் பொருளாதாரச் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமானால், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது முக்கியமல்ல; அவர் கடன் சுமை அற்றவராக இருக்கிறாரா என்பதே முக்கியம். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் வாழும் பகட்டான வாழ்க்கையைப் போல நாமும் வாழ வேண்டும் என்று நம்மிடம் ஆசையைத் தூண்டுவதற்கு இங்கு ஆயிரம் காரணிகள் உள்ளன.