

வாசகர்கள் மத்தியில் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நூல்களை மலிவு விலையில் மக்கள் பதிப்பாக வெளியிட்டுவருகிறது, சீர் வாசகர் வட்டம் (அரங்கு எண்: 82, 83). மக்கள் பதிப்புகள் வரிசையில், சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள்’ 35 ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.
‘தாய்’ நாவல் 15 ஆயிரம் பிரதிகளும், பேராசிரியர் வீ.அரசு தொகுத்த ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ 6 ஆயிரம் பிரதிகளும், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ சுமார் 5 லட்சம் பிரதிகளும் விற்பனையாகியுள்ளன. 2,700 பக்கங்களிலான லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ ரூ.1,500தான். பரிசுப் பொருளாக வழங்குவதற்கு ஏற்ற வகையில், 15 தனித்தனி நூல்களாகத் தயாரிக்கப்பட்டு, அட்டைப்பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.