

வதைகளைக் கையளித்தவர்களை வரலாறு அடையாளம் காட்டுவதோடு அதிலிருந்து மீள்வதற்கான பாதையையும் குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால், இவை எதுவும் இயல்பாக நடந்தேறிவிடவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையில், சமூகத்தைப் பண்படுத்தியவர்களின் போராட்டமில்லாமல் இந்த மாற்றங்கள் சாத்தியமாகியிருக்காது. பெண்களுக்கு அப்படியான மாற்றங்களுக்கு வித்திட்ட வீரப் பெண்களைத்தான் ‘பெண் எனும் போர்வாள்’ காட்டுகிறது.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியானவை. தொடராக வெளிவந்தபோதே பாராட்டும் விமர்சனங்களுமாக வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவை. வாழ்வின் நமது எல்லா நிலைகளிலும் சக பயணியாக நம்மோடு பயணிக்கும் பெண்களை, சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் சரிநிகராகக் கருதும் அளவுக்கு நாம் மாற வேண்டும் என்பதையே இந்நூல் உணர்த்துகிறது.