

‘நீதிமன்றங்கள் குற்றங்களை ஈர்க்கின்றன’ என்கிற பிரான்ஸ் காஃப்காவின் நாவல் வாக்கியம்போல் இன்றைய நீதிமன்றங்களும் சிறைச்சாலைகளும் குற்றங்கள் உருவாவதற்கான இடங்களாக மாறியிருக்கின்றன.
சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் செல்லும் குற்றவாளிகள் விடுவிக்கப்படும்போது, பெரிய குற்றங்களுக்குத் தயாராகிவிடுகிறார்கள் என்பதைப் பல கொலை, கொள்ளை விசாரணைகளில் பார்க்கிறோம். இந்தப் பின்னணியில் நமது குற்றவியல் சட்டங்களையும் சிறை அமைப்பையும் விசாரணை செய்கிறது, கண்ணப்பன் ஐபிஎஸ்ஸின் இந்தப் புத்தகம்.