

இலக்கியத்திலிருந்து திரைக்கு வந்திருக்கும் மற்றுமொரு படைப்பு ‘த சில்ரன்ஸ் டிரெயின்’ (The Children's Train). இத்தாலிய எழுத்தாளர் வியோலா ஆர்டன் எழுதி 2019இல் வெளியான இந்த நாவல், இதே பெயரில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கிறிஸ்டினா காமன்சினி இயக்கத்தில் படமாக வெளியாகியிருக்கிறது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு 1940களின் இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் முசோலினியும் பாசிசவாதிகளும் வீழ்த்தப்பட்டுவிட்டாலும் போரின் கோரத்தாண்டவத்தால் இத்தாலி மோசமாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, இத்தாலியின் தெற்குப் பகுதி. அதனால்,