Published : 09 Jun 2018 09:29 AM
Last Updated : 09 Jun 2018 09:29 AM

‘புத்தகத் திருடர்கள்’ சென்னை வருகை!

செ

ன்னையில் புத்தகப் பிரியர்கள் பெரும் வேட்டையை நேற்று தொடங்கினார்கள். ‘புக்சோர்’ இணையதளம் முன்னெடுத்த வித்தியாசக் கண்காட்சியில்தான் நடந்தது இந்த வேட்டை. ரூ.999, ரூ.1,499, ரூ.2,499 இந்த மூன்று விலைகளில் காசுக்கேற்ப அளவுடைய காலிப் பெட்டிகளை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். உங்கள் பெட்டி முழுக்க எவ்வளவு புத்தகங்களை அள்ள முடியுமோ அள்ளிக்கொள்ளலாம். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள்தான் இவை என்றாலும், புதுமை கலையாமல் இருந்தன. ஜூன் 8-ம் தேதி தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி 10-ம் தேதி (நாளை) வரை சென்னை திநகரிலுள்ள விஜயா மஹாலில் நடைபெறுகிறது. இதே போன்ற புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு எங்கும் தமிழ்ப் புத்தகங்களுக்கும் யாராவது நடத்தினால் நன்றாக இருக்கும்!

- ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x