நூல் வெளி: சென்னையும் நாவல்களும் | சென்னை 385

நூல் வெளி: சென்னையும் நாவல்களும் | சென்னை 385
Updated on
2 min read

பல பண்பாட்டு நிகழ்வு​களின் மையம் சென்னை. சென்னையைப் பற்றிப் பலரும் எழுதி​யிருக்​கிறார்கள். சென்னையைப் பற்றிக் கட்டுரை​யாகவும் கதையாகவும் மறைந்த எழுத்​தாளர் அசோகமித்​திரன் நிறையவே எழுதி​யிருக்​கிறார். சென்னையின் அந்தக் காலகட்​டத்திய தண்ணீர்ப் பற்றாக்​குறையை ஒரு சாரமாகப் பேசுவது அவரது ‘தண்ணீர்’.

அந்தக் கதையில் பெண்களின் பாடுகள் ஒரு பக்கமும் தண்ணீர் ஒரு பக்கமுமாக ஓடும். இந்தத் தண்ணீர்ப் பகுதியில் சென்னை சித்தரிக்​கப்​படும். ‘கரைந்த நிழல்கள்’ நாவல், சென்னையின் சினிமா உலகத்தைப் பின்னணி​யாகக் கொண்டது. இது அல்லாமல், பல கட்டுரைகளில் சென்னையைப் பற்றி அளவில்லாப் பிடிபாடுடன் பதிவுசெய்​துள்ளார்​.

எஸ்​.ராமகிருஷ்ணன் சென்னையைப் பற்றிச் சிறுகதைகள் எழுதி​யிருக்​கிறார். சென்னையின் கழிவறை​களைப் பற்றிய அவரது சிறுகதை, சென்னை அடித்​தட்டு மக்களின் வாழ்க்கையைப் பச்சை​யாகச் சித்தரித்தது. அவரது ‘யாமம்’ நாவல் 18ஆம் நூற்றாண்டின் சென்னையைப் பின்னணி​யாகக் கொண்டது.

யாமம் என்கிற வாசனைத் தைலம் தயாரிக்கும் இஸ்லாமியக் குடும்பத்தைப் பின்னணி​யாகக் கொண்ட இந்த நாவல், சென்னையைப் புறமாகவும் உணர்வு​களால் சிதையும் வாழ்க்கையை அகமாகவும் சித்தரிக்​கிறது. ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ நாவல் சென்னையின் முக்கியமான அடையாளங்​களில் ஒன்றான ஐஸ் ஹவுஸ் பின்புலத்தில் எழுதப்​பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்​கப்பட்ட சென்னை மாகாணப் பெரும்​பஞ்சம் என அழைக்​கப்பட்ட பஞ்சத்தை இந்த நாவல் சித்தரிக்​கிறது.

தமிழ்​மகனின் ‘வெட்​டுப்புலி’ வரலாற்று நாவலிலும் சென்னைப் பின்னணி உண்டு. நூறு வருடங்​களுக்கு முந்தைய சென்னையின் ஒரு சித்திரத்தை இந்த நாவலில் பார்க்க முடியும். சமூகரீ​தியில் பிளவுபட்டுக் கிடந்த சென்னை, தன் முகத்தை மாற்றிவருவதை இந்த நாவல் படம்பிடித்துக் காட்டு​கிறது.

விட்டல் ராவ் எழுதிய ‘நிலநடுக் கோடு’ நாவல் ஆங்கிலோ-இந்திய சமூகத்தைப் பின்னணி​யாகக் கொண்டது. ஒரு ஆங்கிலோ-இந்​தியக் குடும்பம் புலம்​பெயர்ந்து வாழும் சென்னையின் புரசை​வாக்கம், பல்லா​வரம், பரங்கிமலை ஆகிய பகுதி​களின் அன்றைய காலச் சித்திரத்தை இந்த நாவல் உருவாக்கு​கிறது.

சென்னை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதி​ய​வர்​களில் ஜெயகாந்தன் முக்கிய​மானவர். ஜெயகாந்​தனின் ‘அப்பு​வுக்கு அப்பா சொன்ன கதைகள்’ நாவலில், ஊரில் இருந்து ஓடிவரும் சிறுவன் சென்னையில் தஞ்சமடைகிறான். இந்தக் கதையில் சென்னையில் பிச்சை எடுக்கும் எளிய மக்களின் அன்றாடம் தத்ரூப​மாகப் பதியப்​பட்​டிருக்​கும். \

சென்னையின் ஒரு நிலப்​பகுதி மீதும் அதன் மனிதர்கள் மீதும் ஜெயகாந்தன் வெளிச்​சத்தைப் பாய்ச்​சி​யிருப்​பார். ஒரு சைக்கிள் ரிக்ஷாக்காரரின் மனைவிக்கு ஏற்படும் சினிமா மோகத்தால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைச் சித்தரிக்கும் நாவல் ‘சினி​மாவுக்குப் போன சித்தாளு’. இதன் வழியே சென்னையின் வாழ்க்கையும் நிலப்​பகு​தியும் சொல்லப்​பட்​டிருக்​கும்.

தொடர்ந்து சென்னை பற்றி எழுதிவருபவர் கரன் கார்க்கி. இவரது ‘கறுப்பர் நகரம்’ உழைக்கும் வர்க்​கத்​தினரின் பங்கைச் சொல்லும் வகையில், சென்னையின் வரலாற்றை உழைப்​பவர்​களின் பார்வையில் எழுதி​யிருக்​கிறது.

தமிழ்ப்​பிர​பாவின் ‘பேட்டை’ சிந்தா​திரிப்​பேட்டை மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டைப் பதிவுசெய்​கிறது. கி.கண்​ணனின் ‘சோளம் என்கிற பேத்தி’ நாவல் சென்னைக் குன்​றத்​தூர்ப் பகுதி வாழ்க்கை​யைப் ப​திவுசெய்​கிறது. இவை அல்​லாமல் பாக்​கியம்​ சங்கர்​ தனது அனுபவக் கட்​டுரைகள் வழி வடசென்னை​யின் வாழ்க்கை​யைப் ப​திவுசெய்​து​வரு​கிறார்​. - ​விபின்​

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in