Published : 02 Mar 2024 06:13 AM
Last Updated : 02 Mar 2024 06:13 AM
என் கல்லூரி நாள்களில்தான் இராசேந்திர சோழன் என்கிற பெயரை ‘செம்மலர்’ பத்திரிகையில் தொடர்ச்சியாகப் பார்த்தேன். டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, மேலாண்மை பொன்னுசாமி போன்ற எழுத்தாளர்களின் உரத்த குரலில் பெரும் கலக்கமடைந்திருந்த என்னை இராசேந்திர சோழன், கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன் போன்ற படைப்பாளிகள் கலைக்கு மிக அருகில் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
மற்ற இருவரையும்விட இராசேந்திர சோழன் மனதிற்கும் வாசிப்பதற்கும் என் வாழ்விற்கும்கூட மிக நெருக்கமாக வந்ததற்குக் காரணம், அவர் எங்கள் மண்ணின் படைப்பாளி. எங்கள் மல்லாட்டைக் கொல்லையிலிருந்து கூப்பிட்டால் மயிலம் அரசுத் தொடக்கப்பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருக்கிற இராசேந்திர சோழனுக்குக் கேட்டுவிடும் என நம்பினேன். என் நிலப்பரப்பின் மொழியை அவர் கதைகளில்தான் முழுதாகப் பருகினேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT