Published : 17 Feb 2024 06:13 AM
Last Updated : 17 Feb 2024 06:13 AM

ப்ரீமியம்
தமிழ்ச் சிறார் நூல்களில் ஓவியம் சிறக்க வழி என்ன?

ஏன் புத்தகக் காட்சிகளுக்கு வரும் குழந்தைகள் ஆங்கிலப் புத்தகங்களையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள், ஏன் குழந்தைகளைச் சாப்பிடவைக்க, சமாதானப்படுத்த தொலைக்காட்சித் திரையிலோ, திறன்பேசியிலோ கார்ட்டூன் படங்களைப் பெற்றோர் போடுகிறார்கள்? தமிழைவிடப் பிற மொழிகளின் கதையம்சம் ஈர்ப்புடையதாக இருக்கிறதா? இல்லை என்பதே எல்லாவற்றுக்குமான பதில். உலகத்துக்கே சவால்விடும் கதைகள் எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் நம்மிடையே கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவை அதே அளவுக்குக் காட்சிவயப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சில சர்வதேசச் சிறார் இதழ்கள், புத்தகங்களுக்கு ஓவியங்களுக்கான உரிமை கோரிக் கடிதம் எழுதுகையில், அதற்கு அவர்கள் சொன்ன விலை கிட்டத்தட்ட எழுத்துக்கு நிகரான உரிமத்தொகையாக உள்ளது. ஓவியர்கள் புதுக் கதாபாத்திரங்களை வடிவமைக்கிறார்கள். அதற்கென்று பிரத்யேகமான உடை, உடல்மொழி எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான் அங்கே ஓவியங்கள் கதையை வழிநடத்துகின்றன. ஆஸ்டிரிக்ஸ், டின்டின் ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x