Published : 21 Jan 2024 07:39 AM
Last Updated : 21 Jan 2024 07:39 AM
வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், நூல் உருவாக்கத்தையும் விற்பனையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட பதிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட சில வாக்குறுதிகள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை தவிர, அரசு தலையிட்டுச் சரிசெய்ய வேண்டிய வேறு சில குறைகளைப் பற்றியும் பதிப்பாளர்கள் தரப்பிலிருந்து அறிய முடிகிறது.
நின்றுபோன நூலக ஆணைகள்: தமிழ்நாடு அரசு நூலகங்களுக்குப் பதிப்பாளர்களிடமிருந்து நூல்களைப் பெறுவதற்கான நூலக ஆணைகள் வெளியிடப்படுவதில்லை என்பது பதிப்பாளர்களின் பெருங்குறையாக இருக்கிறது. “கடந்த 3-4 ஆண்டுகளாக நூலகத் துறை புத்தக ஆணைகளை வழங்கவில்லை. நாங்கள் நினைவுபடுத்தி வருகிறோம். முதலமைச்சருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். வரக்கூடிய காலத்தில் அதைச் செயல்படுத்திக்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். புத்தக வாசிப்பு குறைந்துவரும் சூழலில் பதிப்பாளர்களுக்கு நூலக ஆணைதான் பொருளாதாரரீதியில் ஆதரவாக இருக்கும். இந்த நூலக ஆணையை விரைவாக அறிவித்தால்தான் பதிப்புத் துறையைக் காப்பாற்ற முடியும்” என்கிறார் பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT