Published : 09 Dec 2023 06:13 AM
Last Updated : 09 Dec 2023 06:13 AM

ப்ரீமியம்
நூல் நயம்: மனம் ஆற்றும் மாமருந்து

மனதை ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை 10 சிறிய கட்டுரைகள் மூலம் மிகப் பக்குவமாக எழுதியுள்ளார் ஆயிஷா
இரா.நடராசன். மனம் என்பது யாராலும் புரிந்துகொள்ளவே முடியாத ஒன்றல்ல; சரியான சிந்தனையின் மூலமாகவும் முறையான பயிற்சியின் வழியாகவும் மனதை நம்மால் அடக்கியாள முடியும். கற்பனை வளமும் மனதின் விரிவாக்கமுமே மனிதனை விலங்கிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. அந்த மனதைக் கைக்கொள்ளவே பலரும் பல வகைகளில் முயன்று வருகின்றனர். மனித மனதை வெல்லும் ஆற்றல் மனிதனிடத்திலேதான் உள்ளது.

‘மனதை அலைபாய விடுங்கள். தியானம், ஒருநிலைப்படுத்துவது, சாந்தம் இதெல்லாம் அறிவியலுக்கு ஒவ்வாதது. மனம் ஒரு ஆய்வுக்கூடம். சிந்தனையே கருவி. கற்பனையே வேதிவினை. ஐன்ஸ்டீன் போல ஆவதற்கு மனதை ரிசர்ச் பிளீஸ் என்று தூண்ட வேண்டும். உலகின் பிரம்மாண்டப் புதிர்களை விடுவித்த யாவரும் மன ஆய்வுக்கூட நிபுணர்கள்தான்’ என்று தொடங்கும் இந்த நூலின் நெகிழ்வான மொழிநடையே நம் மனதுக்குத் தேவையான மருந்தாகிறது.- மு.முருகேஷ்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x