Published : 17 Jan 2018 10:34 AM
Last Updated : 17 Jan 2018 10:34 AM
எழுத்தாளர்களுக்கு கௌரவம்
செ
ன்னை புத்தகக் காட்சியில் ஆண்டுதோறும் பார்வையாளர் அனுமதிச் சீட்டுகள், சீசன் டிக்கெட், பதிப்பகங்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள், விழாக்களில் கலந்துகொள்பவர்களுக்கு வி.ஐ.பி பாஸ் என்று பலவகையான நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டில் முதன்முறையாக எழுத்தாளர்களுக்குத் தனியாக நுழைவுச் சீட்டுகளை விநியோகித்திருக்கிறார்கள். சட்டைப்பையில் ‘எழுத்தாளர்’ அனுமதிச் சீட்டுடன் நமது எழுத்தாளர்கள் கம்பீரமாக உலாவரும் காட்சியைப் பார்க்க முடிகிறது. எழுத்தாளர் என்ற அடையாளத்தோடு அவர்களைக் கெளரவிப்பதுதானே முறை. வாசகர்களோடு, எழுத்தாளர்களின் மனங்களையும் கவர்ந்துவிட்டது பபாசி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT