Published : 14 Jan 2018 08:52 AM
Last Updated : 14 Jan 2018 08:52 AM

மீண்டும் அண்ணா!

ரு தலைவரோ சிந்தனையாளரோ அவர் சம்பந்தப்பட்ட வட்டத்தைத் தாண்டி உள்ளவர்களாலும் ஆரத்தழுவிக்கொள்ளப்படுவதென்பது அவரது பேராளுமையின் அடையாளம். காந்தி, அம்பேத்கர், பெரியார் வரிசையில் அந்தப் பெருமை அண்ணாவுக்கும் தற்போது கிடைத்துக்கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்துக்கு வெளியில் உள்ள பலரும் அண்ணாவைப் பற்றியும் திராவிட இயக்க வரலாற்றைப் பற்றியும் புத்தகங்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புத்தகங்களும் பரபரப்பாக விற்கின்றன. திராவிட இயக்கம் சாராதவரான ஆழி செந்தில்நாதன் தற்போது அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ புத்தகத்தை மறுபதிப்பு செய்திருக்கிறார். புத்தகக் காட்சியில் வெளியான நாள் அன்றே பெரும் வரவேற்பு பெற்ற நூல் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x