Published : 18 Jan 2018 10:16 AM
Last Updated : 18 Jan 2018 10:16 AM

பளிச்: எழுத்தாளர்களைச் சந்திக்க அழைக்கும் ‘பாரதியார் அரங்கம்’

எழுத்தாளர்களைச் சந்திக்க அழைக்கும் ‘பாரதியார் அரங்கம்’

பு

த்தகக் காட்சியின் நுழைவாயில் வலதுபுறத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் ‘மகாகவி பாரதியார்’ அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு எழுத்தாளர்களோடு வாசகர்களும் கலந்துரையாடும் சந்திப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை எழுத்தாளர்கள் கரன் கார்க்கி, சரவணன் சந்திரன், ‘அறம்’ கோபி நயினார், அ.மார்க்ஸ், கே.என்.சிவராமன், பாஸ்கர் சக்தி ஆகியோர் பங்கேற்று, வாசகர்களோடு கலந்துரையாடி உள்ளனர். இன்று மாலை இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன் வருகை தரவிருக்கிறார். நாளை, கவிதை வாசிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. பிடித்த எழுத்தாளர்களோடு வாசகர்கள் கலந்துரையாடி மகிழ இது ஒரு நல்ல வாய்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x