

மனிதன் நினைப்பது ஒன்று…
அசோக் யெசுரன் மாசிலாமணி
மாசி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.155
தொடர்புக்கு: 9498552237
சாதி வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்று உரைக்கும் எளிய நாவல் இது. எழுபது வயதில் தனது முதல் நாவலை நூலாசிரியர் எழுதியிருக்கிறார் என்பது இதன் தனித்துவம்.
காரைக்கால் அம்மையார்
இராமநாதன் பழனியப்பன்
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9710087964
காரைக்கால் அம்மையார் புராணம், அம்மையாரின் பாடல் சிறப்புகள், வழிபாடு எனப் பலவிதங்களில் காரைக்கால் அம்மையார் குறித்த முழுமையான நூல் இது எனலாம்.
உச்சம் தொடு
சோம.வள்ளியப்பன்
கிழக்குப் பதிப்பகம்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 044 42009603
போட்டிகள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், வெற்றியை எட்டிப் பிடிக்கும் நுட்பம் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவது இயல்பானதுதான். அதைச் சொல்லும் நூல் இது.
பெண் பக்கம் பேசுகிறேன்
சங்கமித்ரா
வெங்காயம் பதிப்பகம்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 9600294284
இன்றைய பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை, அவர்களே ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டுக் கிடப்பது ஆகியவற்றை எதிர்க்கும் கருத்தை முன்வைக்கும் நூல் இது.
புர்ர்ர்… (சிறார் கதைகள்)
நாணற் காடன்
நம் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9566110745
பழங்களெல் லாம் வாழும் ஒரு நாடு. அங்கு பலாப்பழம் ராஜா - இப்படி குழந்தைகளைக் கவரும் அழகான கற்பனையில் அமைந்த கதைகள் நிறைந்த புத்தகம் இது.