Published : 02 Dec 2017 10:43 AM
Last Updated : 02 Dec 2017 10:43 AM

பிறமொழி நூலறிமுகம்: வந்த வழி காண…

ந்தியா விடுதலை பெற்ற 91 ஆண்டு காலப் போராட்ட வரலாற்றை (1857-ல் நடந்த சிப்பாய் எழுச்சி தொடங்கி 1947 வரை) விவரிக்கும் இந்நூல் தனிச் சிறப்புடையதாகும்.

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பிபன் சந்திராவின் தலைமையில் அடுத்த தலைமுறை வரலாற்றாசிரியர்களான மிருதுளா முகர்ஜி, ஆதித்யா முகர்ஜி, கே.என். பணிக்கர், சுசேதா மகாஜன் ஆகியோர் மேற்கொண்ட ஆழமான ஆய்வுகள், நூற்றுக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரலாற்றுக் களஞ்சியம் உருவாகியுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நீரோட்டங்களையும் உள்ளடக் கிய வகையில் இந்தியாவின் நவீன வரலாற்றைச் சித்தரிக்கும் இந்நூல் நம் அனைவருக்குமான பாடமாக விரிகிறது. “இதுவரை வந்த வழி தெரிந்தால்தான் எத்திசை நோக்கி நம்மால் முன்னேற முடியும்” என்று சொல்லப்படுவதற்கு எடுத்துக்காட்டாய் இந்நூல் திகழ்கிறது.

- வீ.பா. கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x