Published : 23 Sep 2023 06:23 AM
Last Updated : 23 Sep 2023 06:23 AM
தியடோர் பாஸ்கரன் 1980 களிலிருந்து தமிழ் சினிமா குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் வௌிவந்துள்ள நூல் ‘திரையில் விரியும் சமூகம்’. சினிமா எதிர்மறையாகப் பார்க்கப்பட்ட தொடக்கக் காலத்தில் அது தேசிய எழுச்சிக்குப் பயன்படக்கூடிய கலை என்று நம்பியவர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி என்றும் தமிழ் சினிமாவின் சகல பரிமாணங்களையும் முதன்முதலில் அரசியலுக்குப் பயன்படுத்தியது இந்திய தேசியக் காங்கிரஸ்தான் என்பதையும் சுட்டி, அதன் செயல்பாட்டை விவரிக்கிறார்.
சாதி-வர்க்க முரண்களை உடைத்துச் சமூகப் புரட்சியை உண்டாக்கிய இடமாக சினிமாக் கொட்டகைகள் எப்படித் திகழ்ந்தன என்றும் பிரிட்டிஷாரின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற நோக்கத்தின் அடிப்படையில், 1918ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் அமல்படுத்தப்பட்ட தணிக்கை முறை, முதலில் காவல் துறை கையில் இருந்ததற்கான காரணத்தையும் விவரிக்கும் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் தொடக்கக் காலச் சூழலை அறியத் துணைபுரிவன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT