

தினை அல்லது சஞ்சீவனி
இரா.முருகன்
எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.630
தொடர்புக்கு: 8925061999
இரா.முருகனின் முற்றிலும் கற்பனைமயமான நாவல் இது. கோகர் என்கிற மலையில் நிகழும் கதை, கற்பனைச் சிறகை விரித்துப் பறக்கிறது.
அம்பை சிகண்டி
செ.அருட்செல்வப் பேரரசன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.210
தொடர்புக்கு: 8148066645
மகாபாரதக் காவியத்தில் முக்கியமான கதாபாத்திரம் அம்பை. இந்தக் கதாபாத்திரத்தை வைத்து, பாரதக் கதையைப் பார்க்கும் நூல் இது.
தேமதுர தமிழ்
நவீன ஆத்திசூடி
விஷ்ணுதாசன்
புஸ்தகா வெளியீடு
விலை: ரூ.80
தொடர்புக்கு: 7418555884
ஔவையின் ஆத்திசூடிபோல் பாரதியாரும் ஒன்றை எழுதியிருக்கிறார். அது போன்ற புதிய ஆத்திசூடியை விஷ்ணுதாசன் இதில் எழுதியிருக்கிறார்.
கலிங்க மன்னர் இமயவர்மன்
பி.ஆர்.சுப்பிரமணியராஜா
கவிதா பப்ளிகேஷன்
விலை: ரூ.1,125
தொடர்புக்கு: 044 42161657
கலிங்க மன்னர் இமயவர்மனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட சுவாராசியமான நூல். எளிய நடை, செறிவான விவரிப்புடன் கூடிய நல் வாசிப்பு தரும் நூல் இது.
ஹோ சி மின்
யெவ்கனி கொபலெவ் (தமிழில்: க.விஜயகுமார்)
தமிழோசை பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 9788459063
வடக்கு வியட்நாமின் பிரதமராக இருந்த ஹோ சி மின் என்கிற புரட்சிக்காரரின் வாழ்க்கைக் கதை இது. புரட்சி, போர், கம்யூனிச நாட்டை உருவாக்கியது எனப் பல அம்சங்களில் விரிகிறது நூல்.