Last Updated : 02 Sep, 2023 06:28 AM

 

Published : 02 Sep 2023 06:28 AM
Last Updated : 02 Sep 2023 06:28 AM

ப்ரீமியம்
நூல் வெளி: சமூகத்தைப் பேசும் கதைகள்

சமூகத்தைப் படிப்பதும் எழுதுவதும்தான் என் உயிர்மூச்சு என்று சொல்லும் இமையத்தின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘திருநீறு சாமி’. தலித்எழுத்து, நடுநாட்டு எழுத்து என்றெல்லாம் இமையத்தின் கதைகள்மீது வைக்கப்படும் பார்வைகளைத் தகர்த்து,நடுத்தர மக்களின் வாழ்க்கைமுறையை, நகர்ப்புறத்து மக்களின் சிக்கல்களை, கல்விப்புலம், சமூக ஊடகம், மருத்துவம், அரசியல் சார்ந்து நவீனச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அணுகுகின்ற எழுத்துகளாக இக்கதைகளைக் காண முடிகிறது.

தலைப்புக் கதையான ‘திருநீறுசாமி’ கிராமம்-நகரம், தமிழ்நாட்டுக் கணவன் - டெல்லி மனைவி, மரபு-நவீனம், சித்தர் மரபு-நிறுவனமயப்பட்ட கோயில் மரபு உள்ளிட்ட முரண்களில் பின்னிப் பிணைந்த செழுமையோடு நகரும் கதை. தமிழ்நாட்டுக் கிராமத்தில் பிறந்து டெல்லிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அங்கேயே வசிக்கும் அண்ணாமலையின் குலசாமி கோயில் விருப்பத்துக்கும் அதை அலட்சியமாக நிராகரிக்கும் மனைவிக்குமான உரையாடலும் விவாதமும்தான் கதை. இதன் வழியே தமிழ் சித்தர் மரபின் செழுமையையும் கோயில் நிறுவனங்களின் வணிகச் செயல்பாட்டையும் ஆசிரியர் விவரித்துச் செல்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x