Published : 16 Dec 2017 10:45 AM
Last Updated : 16 Dec 2017 10:45 AM

நூல் நோக்கு: சமூக மருத்துவரின் பணி

சமூக மருத்துவப்

பாதுகாவலரின் பணி

ஆயுர்வேத–அலோபதி மருத்துவ முறைகளின் மேலாதிக்கத்தால், நம் பாரம்பரியமிக்க சித்த மருத்துவம் அழிந்துவிடாமல் காத்திட தொடர்ந்து செயல்பட்ட ஆனந்தம்பண்டிதரின் சமூகப் பணிகளின் தொகுப்பிது. பரம்பரையாக மருத்துவம் செய்துவந்த குடும்பத்தில் பிறந்த ஆனந்தம்பண்டிதர் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களோடு, தமிழ் மருத்துவ நூல்களையும் படித்தவர். 1928-ம் ஆண்டு தமிழ் சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கும் போராட்டத்துக்கு உறுதுணையாக ‘மருத்துவன்’ எனும் மாத இதழை அவர் தொடங்கினார்.

மருத்துவப் பணிகளோடு நின்றுவிடாமல், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்றவற்றுக்கான போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஆனந்தம்பண்டிதர் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுத் தரவுகள் இந்நூலில் உள்ளன. சித்த மருத்துவம், சமூக மருத்துவம், நோய்க் கிடங்கொடேல், மருத்துவன், பண்டிதருக்குப் பாராட்டு என 5 தலைப்புகளின் கீழ் ஆனந்தம்பண்டிதரின் பணிகளைப் பெருமுயற்சியெடுத்து தொகுத்துத் தந்துள்ள பதிப்பாசிரியரின் பணி பாராட்டுக்குரியது. வரலாற்றில் மறைக்கப்பட்ட ஆளுமைகளைப் பற்றி இது போன்ற புத்தகங்கள் வெளியாவது நம் காலத்தின் தேவை.

-மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x