Published : 10 Jun 2023 06:24 AM
Last Updated : 10 Jun 2023 06:24 AM

ப்ரீமியம்
நூல் வெளி: எங்கும் புகழ் மணக்கும் திருப்புகழ்!

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் இலக்கிய வரிசையில் மிகச் சிறப்புப் பெற்றது அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ். ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என முருகன் அடியெடுத்துக் கொடுக்க, அருள்ஞானம் பெற்று அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றியதாக அறியப்படுகிறது. மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நுட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாளநுட்பம், சந்தபேதம், இனிய ஓசை உள்ளிட்ட அம்சங்களைப் பெற்று திருப்புகழ் அமைந்துள்ளது. திருப்புகழை எளிய மக்களும் வாசித்து அணுகும் வகையில், அதற்கு முதன்முதலில் உரைகண்டு பதிப்பித்தவர்கள் தணிகைமணி வ.சு.செங்கல்வராயர் குடும்பத்தினர்.

தணிகைமணி, ராவ் பகதூர், வ.சு.செ. என்ற பெயர்களால் அழைக்கப்படும் வ.சு.செங்கல்வராயர், தமிழுக்கு வழங்கிய பங்களிப்புகள் ஏராளம். திருப்புகழ் பதிப்பாசிரியரான சிவஞானச் செல்வர் வ.த.சுப்பிரமணியரின் இளைய மகனான செங்கல்வராயர், அன்றைய தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் 15.08.1883 அன்று பிறந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x