இளம் தலைமுறையினர் உறவுகளை அறிய சங்கமித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 180 பேர் - சிவகங்கை அருகே நெகிழ்ச்சி

இளம் தலைமுறையினர் உறவுகளை அறிய சங்கமித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 180 பேர் - சிவகங்கை அருகே நெகிழ்ச்சி

Published on

சிவகங்கை அருகே இளம்தலைமுறையினர் உறவுகளை அறிந்துகொள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 180 பேர் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கொளுக்கட்டிபட்டியைச் சேர்ந்த தம்பதி அருளபாக்கி, நாச்சம்மாளுக்கு 3 மகன்கள், 6 மகள்கள் இருந்தனர். இவர்களில் தற்போது காசி (87) மட்டுமே உள்ளார். மேலும் 9 பேரது வாரிசுகள் 180 பேர் மேலமங்கலம், ஒக்கூர், மேலப்பூங்குடி, திருச்சி, சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

மலரும் நினைவுகள்: அவர்களது குடும்பத்தில் உள்ள 3-ம் மற்றும் 4-ம் தலைமுறையினர் உறவினர்களை அறியாமல் இருந்தனர். இதையடுத்து தங்களது சொந்த பந்தங்களை அறிந்து கொள்வதற்காக ஒன்று கூட முடிவு செய்தனர்.

இதற்காக 3 மாதங்களாக திட்டமிட்டு வாட்ஸ்-ஆப் மூலம் ஒருங்கிணைத்து நேற்று ஒக்கூரில் சங்கமித்தனர். அப்போது அவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். செல்ஃபி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உறவுகளை அறிய ஒன்று கூடிய இந்த விழா பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இளம் தலைமுறையினர் உறவுகளை அறிய சங்கமித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 180 பேர் - சிவகங்கை அருகே நெகிழ்ச்சி
‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in