திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்
Updated on
1 min read

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிப்​ப​தற்​காக 3,250 முறை பாத யாத்​திரை சென்று அசத்​தி​யுள்​ளார் 71 வயது முதியவர் ஒரு​வர்.

திருப்​ப​தியை சேர்ந்​தவர் வெங்​கடரமண மூர்த்தி (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்​தியா வங்​கி​யில் பணி​யாற்றி 2014-ல் ஓய்வு பெற்​றவர். ஏழு​மலை​யானின் தீவிர பக்​த​ரான இவர், பணி​யில் இருக்​கும்​போதே வாரம் ஒரு​முறை விடு​முறை நாளில் திரு​மலைக்கு ​வாரி மெட்டு மார்​க​மாக நடந்து சென்று சுவாமியை தரிசிப்​பதை வாடிக்​கை​யாக கொண்​டிருந்​தார். பின்​னர் இதனையே அவர் ஒவ்​வொரு வார​மும் கடைபிடிக்க தொடங்​கி​னார். இது​வரை தனது வாழ்​நாளில் திருப்​பதி ஏழு​மலை​யானை 3,460 முறை தரிசித்​துள்​ளார். இதில், 3,250 முறை மலை​யேறி நடந்தே சென்று சுவாமியை தரிசித்​துள்​ளார்.

இதுகுறித்து வெங்​கடரமண மூர்த்தி கூறும்​போது: நான் பல ஆண்​டு​களாக திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசித்து வரு​கிறேன். ​வாரி மெட்டு மார்​க​மாக 2388 படிகள் ஏறிச் செல்​வதையே நான் வழக்​க​மாக கொண்​டுள்​ளேன். இதற்கு அவர் மீதுள்ள அளவு கடந்த பக்​தியே காரணம்.

வேலை​யில் இருக்​கும்​போதே திரு​மலைக்கு செல்​வதை வழக்​க​மாக்கிக் கொண்​டேன். ஓய்வு பெற்ற பின்​னர் குறைந்​த​பட்​சம் வாரத்​திற்கு 4 முறை​யா​வது திரு​மலைக்கு மலை​யேறி செல்​கிறேன்.

கோவிந்​தா... கோ​விந்தா… என மனதிற்​குள் சொல்​லிக்​கொண்டே ஒன்​றறை மணி நேரத்​தில் மலை​யேறி விடு​வேன். இந்த வயதி​லும் இவ்​வளவு சக்தி எவ்​வாறு வந்​தது? என கேட்​கிறார்​கள். எல்​லாம் அந்த வெங்​கடேச பெரு​மாளின் கருணை. ஆரோக்​கி​யத்தை காப்​பதே நமது கடமை. ஆயுள் கொடுப்​பது அவனின் கருணை. இவ்​வாறு வெங்​கடரமண மூர்த்​தி கூறி​னார்​.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்
கர்நாடகாவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in