Published : 21 May 2023 07:19 PM
Last Updated : 21 May 2023 07:19 PM

தஞ்சாவூர் | தென்னக பண்பாட்டு மையத்தில் அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா 

தஞ்சாவூர்: தஞ்சையிலுள்ள தென்னக பண்பாட்டு மையத்தில் அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில், தேசிய பரதநாட்டிய அகாடமி சார்பில் 53-வது அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா இன்று காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது. திட்ட அதிகாரிகள் ரவீந்திரகுமார், மைத்ரிராஜகோபாலன், தேசிய பரதநாட்டிய அகாடமி தலைவர் அனிதா ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். இதில் 4 வயது முதல் 60 வயது வரை உள்ள பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, தனி நபர் மற்றும் குழுவாக பரதநாட்டியம் நடனமாடினர்.

குழு நடனத்தில் 4 பேர் முதல் 6 பேர் வரை பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பிரகதீஸ்வரா தேசிய விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை நாட்டிய கலைஞர் சுவாதிபரத்வாஜ் செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x