சேதமடைந்த வண்டியுடன் தன்னந்தனியாக ஓடி 3-வது இடத்தை பிடித்த காளை - கல்லல் அருகே மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரசியம்

சேதமடைந்த வண்டியுடன் தன்னந்தனியாக ஓடி 3-வது இடத்தை பிடித்த காளை - கல்லல் அருகே மாட்டுவண்டி பந்தயத்தில் சுவாரசியம்
Updated on
1 min read

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே குருந்தம்பட்டு பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 9 ஜோடிகள், கரிச்சான் மாடு பிரிவில் 10 ஜோடிகள் பங்கேற்றன. சின்ன மாடு பிரிவு பந்தயத்தின்போது, ஒரு மாட்டு வண்டி, மற்ற மாட்டு வண்டிகளை முந்த முயன்றது. அப்போது, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி சாரதி கீழே விழுந்து காயமடைந்தார்.

மேலும் அந்த வண்டியில் இருந்து ஒரு காளை பிரிந்து சென்ற நிலையில், மற்றொரு காளை வண்டியுடன் ஓடியது. இந்த காளை தன்னந்தனியாக எல்லைக் கோட்டை சென்றடைந்து, மூன்றாவது இடத்தை பிடித்தது. அந்த காளையையும், உரிமையாள ரையும் அனைவரும் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in