Published : 30 Mar 2023 11:12 PM
Last Updated : 30 Mar 2023 11:12 PM

கடந்த ஓராண்டில் ரூ.6 லட்சத்திற்கு இட்லி மட்டுமே ஆர்டர் செய்த பலே வாடிக்கையாளர்: ஸ்விகி ருசிகர தகவல்

கோப்புப்படம்

ஹைதராபாத்: கடந்த 12 மாதங்களில் சுமார் 6 லட்ச ரூபாய்க்கு ஸ்விகி உணவு டெலிவரி செயலியில் இட்லி மட்டுமே ஆர்டர் செய்துள்ளார் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த பலே வாடிக்கையாளர் ஒருவர். உலக இட்லி தினத்தை (மார்ச் 30) முன்னிட்டு இந்த ருசிகர தகவலை ஸ்விகி பகிர்ந்துள்ளது.

இட்லியின் புகழை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30-ம் தேதி ‘உலக இட்லி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2015 முதல் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்விகி நிறுவனம் தங்கள் தளத்தில் இட்லி விற்பனை சார்ந்த கடந்த ஓராண்டு கால மொத்த டேட்டாவை பகிர்ந்துள்ளது.

  • இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை மற்றும் கோவை என ஸ்விகியில் இட்லி ஆர்டர் செய்வதில் இந்த நகரங்கள் டாப் 5 இடங்களில் உள்ளன.
  • காலை 8 முதல் 10 வரை இட்லி ஆர்டர் ஆவி பறக்க குவிகிறது. அதே போல சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கோவை மற்றும் மும்பையில் மாலை நேரங்களிலும் இட்லி அதிகம் ஆர்டர் செய்யப்படுகிறது.
  • பெங்களூரு வாசிகள் ரவா இட்லியையும், சென்னை வாசிகள் நெய் சேர்த்த பொடி இட்லியையும், ஹைதராபாத் வாசிகள் காரப் பொடி மற்றும் நெய் சேர்த்த இட்லியையும், மும்பை மக்கள் இட்லி - வடையை ஆர்டர் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஓராண்டில் சுமார் 33 மில்லியன் இட்லியை ஸ்விகி டெலிவரி செய்துள்ளது.
  • அதில் ஹைதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மட்டும் சுமார் 6 லட்ச ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x