

சென்னை: முதல் துளி மது அருந்தத் தொடங்கும்போதே ஆபத்து தொடங்கும் என்றும், மது அருந்தினால் புற்றுநோய் ஆபத்து என்றும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் மனிதர்கள் அதிக அளவு மது அருந்துகின்றனர். இதன் காரணமாக பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. 230 வகையான நோய்களுக்கு மது அருந்துவது காரணமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் மது காரணமாக, ஆண்டுக்கு 30 லட்சம் மரணங்கள் பதிவாகின்றன. இதில் 13.5 சதவீத மரணங்கள் 20 முதல் 39 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆவர்.
மேலும், புற்றுநோய் பாதிப்புக்கு மது முக்கியக் காரணியாக உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 7,40,000 புற்றுநோய் பாதிப்புகளுக்கு மருந்து அருந்துவது முக்கிய காரணமாக உள்ளது. உலக அளவில் ஐரோப்பிய பிராந்தியத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வு லான்செட் மருத்துவ இதழில் வெளியாக உள்ளது. மது அருந்துபவர்களில் 1.5 லிட்டருக்கும் குறைவான ஒயின் அல்லது 3.5 லிட்டருக்குக் குறைவான பீர் அருந்துபவர்கள் மற்றும் மற்ற மது வகைகளை உட்கொள்பவர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: