

சென்னை: ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய் (கன்சங்டிவிடிஸ் - Conjunctivitis) முதல் முறையாக சென்னையில் கண்டறியப்பட்டதால், இந்த நோய்க்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருப்போம். காலநிலை மாற்றம் காரணமாக உருமாறும் வைரஸ்கள் பரவலால், சில காலம் அடங்கியிருந்த ‘மெட்ராஸ் ஐ’ திரும்பவும் பரவ வேகமெத்துள்ளது. இதனால் சமீபமாக மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவர் வினீத் ராத்ரா கூறும்போது, “கண்நோய் வந்த ஒருவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து விடும் என்று சொல்ல முடியாது. கண்கள் சிவத்தல், நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்ணிலிருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், ‘மெட்ராஸ் ஐ’ பரவலைத் தடுக்கும் வழிமுறைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
மெட்ராஸ் ஐ தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்:
இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோயாகும் என்பதால் சமூகப் பரவலைத் தடுக்க மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கண் சிவந்து போயிருந்தால் அது மழைக்காலத்தில் வரக்கூடிய `மெட்ராஸ் ஐ’ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. கருவிழியில் பிரச்னை, கண் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். கண்ணில் காயம் பட்டாலும் பிற கண் நோய்களாலும் கண்கள் சிவந்து இருக்கும். சிவப்புக் கண் பின்வரும் கண் நிலைகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். அவை: