Published : 24 Nov 2022 05:25 PM
Last Updated : 24 Nov 2022 05:25 PM

கோட்டைமேடு உருவான வரலாறு | கோவை தினம் சிறப்பு

நவ.24: இன்று கோவை தினம்

ஐதர்அலி காலத்தில் (கிபி 1722-1782) கோயமுத்தூரில் கோட்டை வலுவாக இருந்துள்ளது. 1798, 1783, 1790-ம் ஆண்டில் ஆங்கில சிப்பாய்கள் இந்த கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். 1791-ம் ஆண்டில் பெரிய சண்டை நடந்துள்ளது. இந்த கோட்டை ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருப்பதாக கருதி 1792-ம் ஆண்டில் திப்புசுல்தான் அதை இடித்துத் தள்ளினார். மலபாரிலிருந்து இஸ்லாமியர்களை குடிவைத்து கோட்டைமேடு என்று பெயர் தந்ததாக கொங்கு களஞ்சியம் (2005) கூறுகிறது.

பெருவெள்ளம்: 1710-ம் ஆண்டு கோயமுத்தூரில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. பழைய ஆவாரம்பாளையம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையமும் அழிந்து போனது. 1711-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தற்போது உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தை பெரியபாப்பா நாயுடு என்பவர் உருவாக்கினார். இப்போது உள்ள பீளமேடும் அன்றைய தினமே உருவானது.

கோனியம்மன் கோயில் வரலாறு: துடியலூர் செல்லும் வழியில் சங்கனூர் பள்ளம் அருகே பழைய கோனியம்மன் கோயில் இருந்தது. கோயில் சேதமடைந்ததையடுத்து மூலவரான கோனியம்மன் சிலை தற்போது டவுன்ஹாலில் வைக்கப்பட்டது. கோவையில் ஆட்சி செய்த மைசூர் உடையார் அரசர்களால் இக்கோயில் நிறுவப்பட்டது. கோனியம்மன் கோவையின் காவல் தெய்வம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x