

புதுடெல்லி: இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள், நோய் பரவலைக் கண்டறியும் முறை, அதனைத் தடுக்கும் முறை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம்:
குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோய். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ, இல்லாதவர்களுக்கோ இந்நோயினால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொதுவான அறிகுறிகள்:
பாதிப்புகள்:
அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்:
நோய் பரவுதல்:
நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.
உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட), உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் மற்றும் உடல் காயம் உடையவர்களுடன் மறைமுக தொடர்பு, அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறைபடிந்த உடைகள் மூலம் நேரடியாகவும், அறிய முடியாத பொருள்களிலிருந்து மறைமுகமாகவும் இது பரவக்கூடும்
தொற்று காலம்:
சொறி ஏற்படுவதற்கு 1 - 2 நாட்களுக்கு முன்பு வரை அனைத்து சிரங்குகளும் விழும் அல்லது குறையும் வரை
பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: