Published : 18 May 2022 05:54 PM
Last Updated : 18 May 2022 05:54 PM

ப்ரீமியம்
உணவுச் சுற்றுலா - மிதக்கும் நாட்டு மருந்துக் கடை

இந்தியாவின் வெனிஸ் என அழைக்கப்படும் ஆலப்புழையின் நீர்வழித் தடத்தில், மழைச் சாரல் விரவிக்கொண்டிருந்த மாலை வேளை அது! நீல நிறத்தில் பிரதிபலித்த தண்ணீருக்குள், செந்நிறச் சூரியன் மெது மெதுவாக மூழ்கி ஓய்வெடுக்கச் செல்லும் கவித்துவமான காட்சியைக் காண எங்களை அழைத்துச் சென்றது 'படகு இல்லம்'. செல்லும் வழி நெடுகிலும் தென்னை மரங்கள் தலை அசைத்து எங்களை வரவேற்றன. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் மிகப் பெரிய ஏரிக்கு எடுப்பாக நெல் வயல்கள் பசுமையாகக் காட்சியளித்தன. அப்பகுதி மக்களின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்யும் நெற்களஞ்சியம் அது.

ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மணி அளவில் 'கைநகரி' பகுதியில் இறக்கிவிடப்பட்டோம்! இயற்கையை ரசிப்பதற்கான அற்புதமான இடம் அது. நீளமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த அந்த பகுதியைச் சுற்றிலும் தண்ணீர்! ஏதோ தீவுக்குள் இருப்பதைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்குப் பசியாற்றச் சிற்றுண்டி கடைகள் அப்பகுதியில் நிறைந்திருந்தன. பசியாற்றிக் கொள்ளச் சிற்றுண்டி ரகங்களைத் தேடின கண்கள்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x