Published : 14 May 2022 06:13 PM
Last Updated : 14 May 2022 06:13 PM

ப்ரீமியம்
சித்திரையில் களைகட்டும் கட்டைக்கூத்து

சித்திரையின் சிறப்புகளில் ஒன்று வட தமிழகக் கிராமங்களில் நடைபெறும் திரௌபதி அம்மன் திருவிழாவும் அதையொட்டி அரங்கேற்றப்படும் கட்டைக்கூத்தும். காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் மண்பாதையில் பயணித்தால் வருகிறது மேல்பங்காரம் கிராமம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே நடந்த கட்டைக்கூத்து நாடகம், எளிய மக்களின் வாழ்க்கையை அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் கலையைப் பறைசாற்றியது.
ஊருக்குள் நுழைகிறபோதே தென்படுகிற கோயில், அதையொட்டிய வேப்பமரம், வெயிலுக்கு அதன் நிழலில் இளைப்பாறியபடியே பேசிக்கொண்டிருக்கிற ஊர்ப்பெரியவர்கள், ஆடு, மாடுகளின் மணிச்சத்தம், பள்ளிவிடுமுறையில் ஆடிக்களிக்கும் குழந்தைகளின் உற்சாகக்குரல், அதைத் தோற்கடிக்கிற அக்காக்குருவியின் அழைப்பு... ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது அந்தக் கிராமத்தின் உன்னதம்.
அது சித்திரை மாதமோ, நள்ளிரவோ கிடையாது. பங்குனி மாத உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஊரின் மையத்தில் இருக்கும் கோயிலில், ஊர்மக்கள் திரண்டிருக்க நமக்காகக் கட்டைக்கூத்தை அரங்கேற்றினார்கள் பாலுசெட்டி பவானியம்மன் நாடக மன்றத்தைச் சேர்ந்த கூத்துக் கலைஞர்கள். நிலவும் நட்சத்திரங்களும் விழித்திருக்க, இரவின் நிசப்த மேடையில் ஆரவாரத்துடன் நடத்தப்படுகிற கட்டைக்கூத்தைப் பார்த்த நமக்கு, பகலில் நடந்த அந்தக் கூத்து வித்தியாச அனுபவத்தைத் தந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x