Last Updated : 26 Apr, 2022 05:14 PM

 

Published : 26 Apr 2022 05:14 PM
Last Updated : 26 Apr 2022 05:14 PM

ப்ரீமியம்
'நீராகாரம்' முதல் 'பஞ்சமுட்டிக் கஞ்சி' வரை - குளுமை தரும் வேனிற்கால பானங்கள்!

"கோடைக் காலத்தில் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படும் பான வகைகளும் கஞ்சி வகைகளும் நம்மிடையே ஏராளமாக இருந்திருக்கின்றன. ஆனால் இன்றோ தண்ணீர் குடிப்பதற்குக் கூட அலாரம் வைத்து நினைவுப்படுத்தி, நீர் பருகும் அவசர கால யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். நம்மிடையே புழக்கத்தில் இருந்த வேனிற்கால பானங்களை இப்போதைய சூழலில் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கினால், கோடைக் காலத்தை குளிர்ச்சியாகக் கடக்க முடியும்" என்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.

ஒரு சாம்பிள்: குளிர்ச்சி தரும் நீராகாரம் குறித்து அவர் தந்த வழிகாட்டுதலில், "முதல் நாள் இரவு சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் ஊறிய சாதத்தை தண்ணீருடன் சேர்த்துப் பிசைந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டால், குளு குளு நீராகாரம் தயார். தேவைக்கேற்ப மோர் சேர்த்துக்கொள்ளலாம். சின்ன வெங்காயத்தையும், நெல்லிக்காய் வற்றலையும் தொடு உணவாக நீராகாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள, பாரம்பரிய சுவை நம்மை மெய் மறக்கச் செய்யும். வெப்பத்தைத் தணிப்பதோடு, ஏராளமான ப்ரோபையாடிக் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் நீராகாரம், குடல் பகுதியில் நலம் பயக்கும் நுண்கிருமிகளை அதிகப்படுத்தி, ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம் அமைக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x