Published : 18 Apr 2022 08:55 PM
Last Updated : 18 Apr 2022 08:55 PM

ப்ரீமியம்
தமிழகத்தை ஆட்டி படைக்கும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்: தேசிய சாரசரியை விட அதிகம். காரணம் என்ன?

சென்னை: அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே உள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. கரோனா தொற்று காலத்தில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் உடல் உழைப்பே இல்லாத நிலை உருவானது. ஓர் அறைக்குள்ளே அனைத்து பணிகளையும் செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் தொற்றா நோய்கள் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர். மேலும், கரோனா தொற்று காலத்தில் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருந்தது. இதைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தில் 2022-ம் ஆண்டுக்கான தொற்றா நோய் நிலை அறிக்கையின், படி இந்தியாவில் மொத்தம் மரணங்களில் 66 சதவீத மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x