

உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது தீபாவளி. ஒளி, வண்ணங்கள், பட்டாசுகள், இனிப்புகள் ஆகியவற்றுடன் கொண்டாடப்படும் பண்டிகை இது.
எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது, விழிப்புடன் இருப்பது ஆகியவற்றின் மூலம் தீபாவளியை மகிழ்ச்சியும் பாதுகாப்பும் மிக்க பண்டிகையாகக் கொண்டாடலாம்.
முடிந்தால், பட்டாசுகளைத் தவிர்த்துவிட்டு சுத்தமான, பசுமையான தீபாவளியைக் கொண்டாடுங்கள். பட்டாசுகளைத் தவிர்ப்பதன் மூலம் நாம் தீக்காயங்களையும் பிற உடல் பாதிப்புகளையும் தடுத்துவிடலாம் என்பது மட்டுமல்ல; காற்று மற்றும் ஒலி மாசு, சி.ஓ.பி.டி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க புகைமூட்டம் ஆகியவற்றையும் தவிர்த்துவிடலாம். பண்டிகைக் காலங்களில் தீக்காயங்களை மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுதல், மது அருந்துதல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் தன்னளவில் பல்வேறு உடலநலப் பிரச்சினைகளை விளைவிக்கக்கூடியவை.
பட்டாசுகள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
தீக்காய மேலாண்மை:
முதலுதவி: தீப்பற்றிய பகுதியை குளிர்ச்சியான நீரில் முக்கி எடுக்க வேண்டும். அல்லது நீரில் முக்கி எடுக்கப்பட்ட துணியை வைத்து தீப்பற்றிய பகுதியை மூட வேண்டும். பெரிய அளவில் தீப்பற்றி இருந்தால் ஒரு உடலைச் சுற்றி போர்வையை போர்த்த வேண்டும். நகைகளைக் கழற்றிவிட வேண்டும். தீப்பற்றிய பகுதி பெரியதாக இருப்பது, கண்கள், கைகள் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட தீக்காயம், குழந்தைகள், முதியோருக்கு ஏற்பட்ட தீக்காயம் ஆகியவற்றுக்கு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் .
தீக்காயங்களுக்கான மருத்துவமனையில் மேலாண்மை பின்வரும் நோக்கங்களைக் கொண்டவை:
- கட்டுரை: டாக்டர் எஸ்.பகவத் குமார்