அங்கன்வாடியில் மகளை சேர்த்த மாவட்ட ஆட்சியர் @ தெலங்கானா

அங்கன்வாடியில் மகளை சேர்த்த மாவட்ட ஆட்சியர் @ தெலங்கானா
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஆசிஃபா பாத் மாவட்ட ஆட்சியர் வெங்க டேஷ் தோத்ரே, நேற்று முன்தினம் தனது அலுவலகத்துக்கு அருகில் உள்ள அங்கன்வாடிக்கு வந்தார். மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தத்தான் வருகிறார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், ஆட்சியர் வெங்கடேஷ் தோத்ரே, ஸ்வரா எனும் தனது 4 வயது மகளை அங்கன்வாடி பள்ளியில் சேர்க்க வந்ததாக கூறியதோடு, அதற்கான படிவத் தையும் நிரப்பி, தனது மகளை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்தார்.

இதனை அங்குள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனை கவனித்த ஆட்சியர், “அங்கன்வாடி பள்ளியில்தான் என்மகளை போல் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. மற்றகுழந்தைகளுடன் ஆடி, பாடும் வாய்ப்பும் கிடைக்கிறது. இப்படிஇருக்கும் சூழலில்தான் குழந்தைக்கு நல்ல கல்வியும் கிடைக்கும்என்பது எனது நம்பிக்கை” என்று தெரிவித்தார். இதனை அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in