

1863-ம் ஆண்டு முதல் 1902-ம் ஆண்டு வரை வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்து மத துறவி, சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். சிறுவயதிலேயே அதீத நினைவாற்றலுடனும், அறிவுடனும் விளங்கினார். இந்திய தத்துவங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கிய நபராக விளங்கினார். இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரது கருத்துகள் இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. 1893-ம் ஆண்டு இவரால் நிகழ்த்தப்பட்ட சிகாகோ சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார். அவரது மேற்கோள்களில் சில...
“ஒரு நாளில் நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காதபோது - நீங்கள் ஒரு தவறான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.”
ஜனவரி 12 - இன்று - விவேகானந்த பிறந்த தினம் | தேசிய இளைஞர் தினம்