Published : 15 Jul 2023 05:55 PM
Last Updated : 15 Jul 2023 05:55 PM

ஜன்னல் வழியாகக் காணக் கிடைத்த சந்திரயான்-3 விண்கலம்: பயணிகளுக்கு அப்டேட் சொல்லிய விமானி

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நேற்று விண்ணில் சீறிப்பாய்ந்தபோது அதை சென்னையிலிருந்து டாக்கா சென்ற விமானத்தில் இருந்த பயணிகளை ஜன்னல் வழியாக பார்க்கும்படி விமானி அப்டேட் கொடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று (ஜூலை 15) மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது.

இந்நிலையில், நேற்று சந்திரயான் புறப்பட நேரத்தில் வானில் சென்று கொண்டிருந்தது சென்னை - டாக்கா விமானம். அப்போது விமானி சுதாரித்துக் கொண்டு உடனடியாக பயணிகளை ஜன்னலின் வழியே பார்க்கும்படி அறிவுறுத்தினார். வரலாற்று சிறப்புமிக்கத் தருணத்தை விமானப் பயணிகளும் பார்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x