

மும்பை: மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்த விமான பணிப்பெண் பிங்கி (29) விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. மும்பை சிவாஜிபார்க் மயானத்தில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இதுகுறித்து பிங்கியின் தந்தை சிவகுமார் கூறும்போது, “எனது மகள் கடந்த 5 ஆண்டுகளாக விமான பணிப் பெண்ணாக பணியாற்றினார். 3 ஆண்டுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி மும்பையில் தங்கியிருந்து பணியாற்றினார்.
விமான விபத்தில் எனது மகளை பறிகொடுத்துவிட்டேன். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவின் உடல் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டம், தாரட்கோன் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டு நேற்று தகனம் செய்யப்பட்டது.