சாவர்க்கர் விருதை ஏற்க மாட்டேன்: காங். எம்.பி. சசி தரூர் அறிவிப்பு

சாவர்க்கர் விருதை ஏற்க மாட்டேன்: காங். எம்.பி. சசி தரூர் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஹைரேஞ்ச் கிராமப்​புற மேம்​பாட்டு சங்​கம் (எச்​ஆர்​டிஎஸ்), 2025-ம் ஆண்​டுக்​கான வீர சாவர்க்​கர் சர்​வ​தேச விருதுக்கு காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பெயரை அறி​வித்​தது.

காங்​கிரஸ் தலை​மைக்​கும் சசி தரூருக்​கும் இடையே சமீப கால​மாக கருத்து வேறு​பாடு இருந்​து​வரும் சூழலில் இவ்​விருதுக்கு அவரது பெயர் அறிவிக்​கப்​பட்​டது. இந்நிலையில் இவ்விருது தொடர்பான ஒரு கேள்விக்கு ‘‘நான் அந்த விழாவுக்கு செல்லவில்லை’’ என சசி தரூர் பதில் அளித்தார்.

பின்னர் ‘எக்​ஸ்' தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில், “விரு​தின் தன்​மை, அதை வழங்​கும் அமைப்பு தொடர்​பான எந்த விவர​மும் இல்​லாத நிலை​யில், அந்த விழா​வில் கலந்து கொள்​வதா அல்​லது விருதை ஏற்​றுக்​கொள்​வதா என்ற கேள்வி எழவில்​லை. நான் விருதைப் பெற ஒப்​புக்​கொள்​ளாமல் எனது பெயரை அறி​வித்​தது ஏற்​பாட்​டாளர்​களின் பொறுப்​பற்ற செயல்’’ என்​றும் அவர் சாடி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் இவ்​விருது பற்றி சசி தரூருக்கு முன்​கூட்​டியே தகவல் தெரிவிக்​கப்​பட்​ட​தாக​ எச்​ஆர்​டிஎஸ்-இந்​தி​யா​வின் செய​லா​ளர்​ அஜி கிருஷ்ணன்​ கூறி​யுள்​ளார்​.

சாவர்க்கர் விருதை ஏற்க மாட்டேன்: காங். எம்.பி. சசி தரூர் அறிவிப்பு
ரூ.332 கோடியில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 10 நெல் சேமிப்பு வளாகங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in