

அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள வெங்கடாபுரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவருக்கு 12 அடி உயரத்தில் வெண்கல சிலை நேற்று நிறுவப்பட்டது.
இதனை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் இந்திய நாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய பணிகளை முதல்வர் சந்திரபாபு பாராட்டி பேசினார்.