யுவ​ராஜ் மேத்தா

யுவ​ராஜ் மேத்தா

‘அப்பா... என்னை காப்பாற்றுங்கள்...’ - காரோடு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இன்ஜினீயரின் கடைசி வார்த்தை

Published on

நொய்டா: உத்தர பிரதேசத்​தின் நொய்டா பகு​தியை சேர்ந்​தவர் யுவ​ராஜ் மேத்தா (27). சாப்ட்​வேர் இன்​ஜினீய​ரான அவர் குரு​கி​ராமில் உள்ள நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார்.

கடந்த 16-ம் தேதி இரவு வழக்​கம்​போல அலு​வல​கத்​தில் இருந்து அவர் காரில் வீடு திரும்பி கொண்​டிருந்​தார். நள்​ளிரவு 12.05 மணிக்கு நொய்​டா​வின் செக்​டர் 150 பகு​தி​யில் கார் வந்​த​போது எதிர்​பா​ராத​வித​மாக 70 அடி பள்​ளத்​தில் கார் கவிழ்ந்​தது.

அந்த பள்​ளத்​தில் தேங்​கி​யிருந்த சாக்​கடை நீரில் கார் மூழ்க தொடங்​கியது. விபத்​தில் படு​காயமடைந்த யுவ​ராஜ் மேத்​தா, மிகுந்த சிரமப்​பட்டு காரின் மேற்​பகு​தி​யில் ஏறி​னார். தனது தந்தை ராஜ் குமார் மேத்​தாவை செல்​போனில் அழைத்த அவர், “அப்​பா.. என்னை காப்​பாற்​றுங்​கள்… கார் பள்​ளத்​தில் கவிழ்ந்து தண்​ணீரில் மூழ்​கிக் கொண்​டிருக்​கிறது. நான் சாக விரும்​ப​வில்​லை. என்னை எப்​படி​யா​வது மீட்டு செல்​லுங்​கள்’’ என்று கதறினார்.

உடனடி​யாக அவரது தந்தை காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார். நள்​ளிரவு 12.50 மணிக்கு போலீ​ஸாரும், தீயணைப்பு படை வீரர்​களும் சம்பவ இடத்​துக்கு வந்து சேர்ந்​தனர். ஆனால் நள்​ளிரவு என்​ப​தால் 70 அடி பள்​ளத்​தில் அவர்​கள் இறங்​க​வில்​லை.

அப்​போது அந்த வழி​யாக வந்த டெலிவரி ஊழியர் மொகீந்​தர் என்​பவர் துணிச்​சலாக பள்​ளத்​தில் இறங்கி யுவ​ராஜ் மேத்​தாவை மீட்க முயற்சி செய்​தார். அதற்​குள் கார் முழு​மை​யாக தண்​ணீரில் மூழ்​கி​விட்​டது. சுமார் 2 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள் வந்து யுவ​ராஜ் உடலை மீட்​டனர்.

இது குறித்து ராஜ் குமார் மேத்தா கூறும்போது, "என் மூத்த மகள் பிரிட்​டனில் வசிக்​கிறார். ஒரே மகன் யுவ​ராஜ் கார் பள்​ளத்​தில் விழுந்​திருக்​கிறது. எனது மகன் செல்​போனில் அழைத்து அப்​பா, என்னை காப்​பாற்​றுங்​கள் என அழு​தார். ஆனால் எனது மகனை என்​னால் காப்​பாற்ற முடி​யாமல் போய்​விட்​டது" என்றார்.

டெலிவரி ஊழியர் மொகீந்​தர் கூறிய​தாவது: சம்பவ இடத்​தில் சுமார் 100 பேர் கூடி இருந்​தனர். போலீ​ஸார் மற்​றும் தீயணைப்பு படை வீரர்​கள் நீச்​சல் தெரி​யாது என்று கூறி தண்​ணீரில் இறங்கவில்​லை. யாரும் உதவிக்கு வராத நிலை​யில் நான் தனி​யாக கயிறு கட்டி பள்​ளத்​தில் இறங்​கினேன். அதற்​குள் கார் தண்ணீரில் மூழ்​கி​யது.

நான் மேலே இருந்து பார்க்​கும்​போது யுவராஜ் காரின் மேற்​பகு​தி​யில் நின்று செல்​போனில் பிளாஷ் வெளிச்​சத்தை காண்​பித்து கொண்​டிருந்​தார். விரைந்து செயல்பட்டு இருந்​தால் அவரை காப்​பாற்றி இருக்​கலாம். இவ்வாறு மொகீந்​தர் தெரிவித்தார்.

போலீஸ் தரப்​பில் கூறும்​போது, “பள்​ளத்​தில் சுமார் 30 அடி உயரத்துக்கு தண்​ணீர் தேங்​கி​யிருந்​தது. அதில் கார் மூழ்கிவிட்டது. யுவ​ராஜ் மேத்​தாவுக்​கு நீச்​சல்​ தெரி​யாத​தால்​ அவரால்​ கரையேற முடிய​வில்​லை’’ என்​று தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p>யுவ​ராஜ் மேத்தா</p></div>
கிலோ ரூ.380 வரை விற்பனை: தமிழகத்தில் கோழி இறைச்சி விலை உயர்வு ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in