

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரியில் டெல்லி வருகிறார். அவரது பயண தேதியை உறுதி செய்ய இந்திய, உக்ரைன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.