தீ​விர​வாதத்தை தடுப்​பதில் இரட்டை வேடம் கூடாது: எஸ்சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் மோடி வலி​யுறுத்​தல்

தீ​விர​வாதத்தை தடுப்​பதில் இரட்டை வேடம் கூடாது: எஸ்சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் மோடி வலி​யுறுத்​தல்
Updated on
1 min read

பிஷ்கெக்: தீவிர​வாத தடுப்​பில் இரட்டை வேடம் கூடாது என்று எஸ்சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி தெரிவித்துள்ளார். கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று முன்​தினம் தொடங்​கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். முதல்​நாள் மாநாட்​டின்​போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட பல்​வேறு தலை​வர்​களை அவர் சந்தித்துப் பேசி​னார். உச்சி மாநாட்​டின் 2-வது நாள் அமர்வு நேற்று நடை​பெற்​றது.

இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: கடந்த 25 ஆண்டுகளாக எஸ்​சிஓ அமைப்பு வலு​வடைந்து வரு​கிறது. இந்த கூட்​டமைப்​பின் உறுப்பு நாடு​களின் மக்​களின் நன்​மைக்​காக நாம் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும். அடுத்த 5 ஆண்​டு​களில் எஸ்சிஓ அமைப்பு புதிய சாதனை​களை படைக்க வேண்​டும். உலகம் முழு​வதும் குழப்​ப​மான சூழல் நில​வு​கிறது. இந்த இக்கட்டான காலத்​தில் நாம் ஒன்​றிணைந்து செயல்​பட்டு உலகத்தின் நன்​மைக்​காக பாடுபட வேண்​டும். மனித குலத்​தின் மிகப்​பெரிய சவாலாக தீவிர​வாதம் உரு​வெடுத்​துள்​ளது. தீவிரவாதத்தை ஒழிக்க எஸ்​சிஓ நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும்.

மேற்கு ஆசிய போரால் அந்த பிராந்​தி​யம் மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த உலக​மும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. எந்​தவொரு பிரச்​சினைக்​கும் போர்க்​களத்​தில் தீர்வு காண முடி​யாது. அமை​திப் பேச்​சு​வார்த்தை மூலம் மட்​டுமே தீர்வு காண முடி​யும். இதை இந்​தியா ஆணித்​தர​மாக வலி​யுறுத்தி வரு​கிறது. போதைப் பொருள் கடத்​தல் மிகப்​பெரிய குற்​றம் ஆகும். இந்த போதைப் பொருட்​களால் இளம் தலை​முறை சீரழிகிறது.

பல்​வேறு நாடு​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாகிறது. பாது​காப்​பு, குற்​றங்​களை தடுத்​தல், போதைப்​பொருள் கடத்​தலை தடுத்​தல் ஆகிய விவ​காரங்​களில் எஸ்​சிஓ நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும். பரஸ்​பரம் தகவல்​களை பரி​மாறிக் கொள்ள வேண்​டும். உலகத்​தின் வளர்ச்​சி​யில் போக்​கு​வரத்து இணைப்பு மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது.

இதை கருத்​தில் கொண்டு உலக சந்​தைகளை ஒருங்​கிணைக்​கும் பணி​யில் இந்​தியா ஈடு​பட்​டிருக்​கிறது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும். உறுப்பு நாடு​கள் இடையே சாலை, ரயில், விமான போக்​கு​வரத்து மூலம் இணைப்​பு​களை ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பாகிஸ்தான் மீது விமர்​சனம்

எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, தீவிர​வாத தடுப்​பில் இரட்டை வேடம் போடக்​கூ​டாது என்று குறிப்பிட்​டார். பல்​வேறு தீவிர​வாத அமைப்​பு​களுக்கு பாகிஸ்​தான் அடைக்​கலம் அளித்து வரு​கிறது. இதில் பெரும்​பாலான தீவிர​வாத அமைப்​பு​கள் இந்​தி​யா​வுக்கு எதி​ராக நாச வேலைகளில் ஈடுபடுகின்​றன. இந்த விவ​காரம் தொடர்​பாக எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பாகிஸ்​தானை மறை​முக​மாக விமர்சித்தார்.

தீ​விர​வாதத்தை தடுப்​பதில் இரட்டை வேடம் கூடாது: எஸ்சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் மோடி வலி​யுறுத்​தல்
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தார் முதல்வர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in