லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் ஆர்​ஜேடி செயல் தலை​வ​ரானார் தேஜஸ்வி

லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் ஆர்​ஜேடி செயல் தலை​வ​ரானார் தேஜஸ்வி
Updated on
1 min read

பாட்னா: ராஷ்ட்​ரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) செயல் தலை​வ​ராக தேஜஸ்வி யாதவை லாலு பிர​சாத் யாதவ் அறி​வித்​தார். இதை சதி என லாலு மகள் ரோகிணி யாதவ் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

பிஹார் சட்​டப் பேரவை தேர்​தலில் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் கட்சி பல இடங்​களில் தோல்​வியடைந்​த​தால் பின்​னடைவை சந்​தித்​தது. தேர்​தல் நேரத்​தில் லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தெரி​வித்த கருத்​துக்​கள்​தான் தோல்விக்கு காரணம் என கரு​திய தேஜஸ்வி யாதவ், அவருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதையடுத்து ரோகிணி ஆச்​சார்​யா. லாலு வீட்டை விட்டு கோபத்​தில் வெளியேறி​னார்.

இந்​நிலை​யில், ஆர்​ஜேடி கட்​சி​யின் தேசிய செயல் கூட்​டம் பிஹார் தலைநகர் பாட்​னா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் தேஜஸ்வி யாதவை ஆர்​ஜேடி கட்​சி​யின் தேசிய செயல் தலை​வ​ராக லாலு அறி​வித்​தார். அப்​போது ரப்ரி தேவி உட்பட ஆர்​ஜேடி மூத்த தலை​வர்​கள் பலர் உடன் இருந்​தனர். இந்த கூட்​டம் நடை​பெறு​வதற்கு சில மணி நேரங்​களுக்கு முன்​பாக எக்ஸ் தளத்​தில் ரோகிணி வெளி​யிட்ட செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆர்​ஜேடி கட்​சி​யின் கட்​டுப்​பாடு ஊடுரு​வல்​காரர்​கள் மற்​றும் சதி​காரர்​களின் கையில் சென்று விட்​டது. அவர்​களின் ஒரே நோக்​கம் லாலு​வின் கொள்​கைகளை ஒழிப்​பது​தான். கட்​சி​யின் தலை​மையை மாற்​றத்​துக்கு காரண​மானவர்​கள், குழப்​பத்தை ஏற்​படுத்​து​வதை தவிர்த்து சிந்​தித்து பார்க்க வேண்​டும்.

அடித்​தட்டு மக்​களுக்​காக போராடிய கட்​சி​யின் உண்​மை​யான அதி​காரம் எதிரி​களால் அனுப்​பப்​பட்ட ஊடுரு​வல்​காரர்​கள் மற்​றும் சதி​காரர்​களின் கையில் உள்​ளது. இவர்​கள் தங்​கள் தீய நோக்​கங்​களை நிறைவேற்​று​வ​தில் வெற்​றியடைந்​துள்​ளனர். லாலு​வின் கொள்கை மற்​றும் கட்சி நலன் பற்றி பேசி​ய​வர்​களை அவர்​கள் தாக்​கினர். இவ்​வாறு ரோகிணி ஆச்​சார்யா கூறியுள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் ஆர்​ஜேடி செயல் தலை​வ​ரானார் தேஜஸ்வி
“2027 சட்​டப்​பேர​வை தேர்​தலுக்கு தயா​ராகுங்​கள்” - உ.பி. நிர்​வாகி​களுக்கு நிதின் நவீன் வேண்​டு​கோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in