10-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்

10-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்
Updated on
1 min read

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் ஜஹாங்கிர்புராவில் உள்ள டைம்ஸ் கேலக்ஸியில் குடியிருப்பவர் நிதின்பாய் ஆதியா (57). 10-வது மாடியில் வசிக்கும் இவர் கடந்த புதன்கிழமை காலை 8 மணியளவில் ஜன்னலுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த போது நிலை தவறி கீழே விழுந்துவிட்டார்.

ஆனால், அவரது கால் 8-வது மாடி கிரில் கம்பியில் சிக்கியதால் தலைகீழாக தொங்கி வலியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கயிறு கட்டி ஆதியாவை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

10-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்
சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன்; ‘புறநானூறு’ டு ‘பராசக்தி’ - சுதா கொங்காரா பகிர்ந்த சம்பவங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in