பனிச்சிகர ஏரி பகுதிகளில் விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

பனிச்சிகர ஏரி பகுதிகளில் விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், உத்​த​ராகண்ட், சிக்​கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இமய மலை​யின் பனிச்​சிகரங்​களால் பெரு​வெள்​ளம் ஏற்​படக்​கூடிய ஆபத்து அதி​க​மாக உள்​ளது.

பொது​வாக இமயமலை சிகரங்​களில் பனிப் பாறை​கள் உருகிசிகரங்​களி​லேயே மிகப்​பெரிய ஏரி​கள் உரு​வாகும். இந்த ஏரி​களில் மிகப்​பெரிய பனிமலைகள் விழும்​போது ஏரி​கள் உடைந்து பெரு​வெள்​ளம் ஏற்​படக்​கூடும். இமயமலை சிகரங்​களில் தற்​போது உரு​வாகி உள்ள 88 ஏரி​களால் காஷ்மீர் உள்​ளிட்ட 6 மாநிலங்களுக்கு பெரு​வெள்ள அபா​யம் ஏற்​படக்​கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதைத் தொடர்ந்து முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக சிக்​கிம் பகுதி இமயமலை​யின் 16 ஆபத்​தான பனிச்​சிகரங்​களில் அண்​மை​யில் எச்​சரிக்கை கருவிகள் பொருத்​தப்​பட்​டன. அங்​குள்ள 13 பனிச்​சிகர ஏரி​களி​லும் கண்​காணிப்பு கருவி​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. இதுதொடர்​பாக மத்​திய உள்​துறை செய​லா​ளர் கோவிந்த் மோகன் தலை​மை​யில் டெல்​லி​யில் நேற்று உயர்​நிலை ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் சம்பந்தப்பட்ட மாநில தலை​மைச் செய​லா​ளர்​கள் மற்​றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யம், மத்​திய நீர்வள ஆணையம், இந்​திய வானிலை ஆய்வு மையம், புவி​யியல் ஆய்வு மையத்​தைச் சேர்ந்த மூத்த அதி​காரி​கள் பங்​கேற்​றனர். இமயமலை​யின் பனிச்​சிகரங்​களில் உரு​வாகி உள்ள ஏரி​கள் குறித்து கூட்​டத்​தில் விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இந்த ஏரி​கள் உடைந்​தால் எந்​தெந்த நதி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​படும். பெரு​வெள்​ளத்​தின்​போது மேற்​கொள்ள வேண்​டிய நடவடிக்​கைகள், நதி​களின் ஆபத்​தான பகு​தி​களில் வசிக்​கும் மக்களை அப்​புறப்​படுத்​து​வது ஆகியவை குறித்து கூட்​டத்​தில் தீவிர ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இந்த கூட்​டத்​தில் மத்​திய உள்​துறை அமைச்சக செய​லா​ளர் கோவிந்த் மோகன் பேசி​ய​தாவது: பனிச்​சிகர ஏரி​கள் உடைந்தாலோ அல்​லது பனிமலைகள் உடைந்​தாலோ பேரிடர்​கள் ஏற்பட வாய்ப்பு உள்​ளது. இதை தடுக்க சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் தொழில்​நுட்​பங்​களை முழு​மை​யாகப் பயன்​படுத்த வேண்​டும்.

பெரு​வெள்ள பாதிப்பு ஏற்​படக்​கூடிய பகு​தி​களில் மாவட்ட நிர்​வாகங்​கள் மிகுந்த விழிப்​புடன் செயல்பட வேண்​டும். பனிச்​சிகர ஏரி​கள் தொடர்​பாக கடந்த 2024-ம் ஆண்​டில் மத்​திய அரசு ஓர்திட்டத்தை அறி​வித்​தது. இந்த திட்​டப் பணிகளை இமயமலை பகுதி மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். இயற்கை பேரிடர்​களின்​போது உயி​ரிழப்​பு, பொருட்​சேதத்தை குறைக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

பனிச்சிகர ஏரி பகுதிகளில் விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
காலியாக உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in