மாநிலங்களவையை வழிநடத்த 6 பேர் கொண்ட குழு நியமனம்

அதி​முக எம்​.பி. தம்பிதுரை

அதி​முக எம்​.பி. தம்பிதுரை

Updated on
1 min read

புதுடெல்லி: ​மாநிலங்​களவை தலை​வர், துணைத் தலை​வர் இல்லாத நிலை​யில் வழி நடத்​தும் குழு​வுக்கு அதி​முக எம்​.பி. தம்பிதுரை உட்பட 6 பேர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மாநிலங்​களவை எம்​.பி.​யாக இருந்த ஹரிவன்​ஷின் பதவிக்காலம், கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. இதைத் ​தொடர்ந்து அந்த அவை​யின் எம்​.பி.​யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலை​வர் நியமித்த நிலை​யில், கடந்த 10-ம் தேதி அவர் நியமன எம்​பி-​யாக பதவி​யேற்​றுக் கொண்​டார். இந்​நிலை​யில், மாநிலங்​களவை துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தல் டெல்லியில் இன்று நடை​பெற உள்​ளது. அந்​தப் பதவியை ஏற்கெனவே தொடர்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலை​யில், அப்​ப​தவிக்கு அவர் மீண்​டும் தேர்வு செய்​யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதனிடையே மாநிலங்​கள​வைத் தலை​வர் துணைத் தலை​வர் இல்லாத வேளை​களில், அந்த அவையை வழி நடத்​தும் குழுவை குடியரசு துணைத் தலை​வரும், மாநிலங்​கள​வைத் தலை​வரு​மான சி.பி.​ரா​தா கிருஷ்ணன் நேற்று முன்​தினம் மாற்​றியமைத்​தார். அதில் 6 பேர் இடம்​பெற்​றுள்​ளனர்.

அந்​தக் குழு​வில், அதி​முக எம்பி தம்​பிதுரை, பாஜக எம்​பிக்​கள் தினேஷ் சர்​மா, பாங்​னோன் கோன்​யாக், கன்​ஷி​யாம் திவாரி, பிஜு ஜனதா தள கட்சி எம்​.பி. சஸ்​மித் பத்​ரா, காங்​கிரஸ் எம்​.பி. ஃபுலோ தேவி நேதாம் ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர். மாநிலங்களவை பொதுச் செயலர் பி.சி.மோடி வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் இது தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>அதி​முக எம்​.பி. தம்பிதுரை</p></div>
கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in