அயோத்தி ராமர் கோயில் காவிக் கொடியின் முக்கியத்துவம்

அயோத்தி ராமர் கோயில் காவிக் கொடியின் முக்கியத்துவம்
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் நேற்று ஏற்​றப்​பட்ட புனிதக் கொடி பற்றி முக்​கிய தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யில் ஸ்ரீராமஜென்​ம பூமி கோயி​லின் கட்​டு​மானப் பணி சமீபத்​தில் நிறைவடைந்​தது. இதையடுத்​து, அந்தக் கோயி​லின் உச்​சி​யில், ‘தர்ம துவாஜா’ என்ற காவிக் கொடியை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று ஏற்​றி​னார். பண்​டையக் காலம் முதல் கோவி​தாரா (மந்தாரை) என்ற மரத்​தில் ஏற்​றப்​படும் இது ‘கோ​வி​தாரா கொடி’ என்​றழைக்​கப்​படு​கிறது. இது, கலி​யுகத்​தில் கூட வெள்ளி யுகத்​தின் உணர்​வைத் தூண்​டும் எனக் கருதப்​படு​கிறது.

இக்​கொடியைப் பற்​றிய குறிப்பு வால்​மீகி ராமாயணத்​தின் அயோத்தி காண்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளது. இந்​தக் கொடியை ஏற்ற முடிவு செய்​ததன் மூலம் ​ராமஜென்​மபூமி கோயில் அறக்​கட்​டளை​யினர், அயோத்​தியை கவுர​வித்​திருப்​ப​தாக​வும் கருதப்​படு​கிறது. கோவி​தாரா மரம் சனாதன கலாச்​சா​ரத்​தின் விலைம​திப்​பற்ற பொக்​கிஷ​மாக​வும் மதிக்​கப்​படு​கிறது.

இது அயோத்​தி​யின் அடை​யாள​மாக​வும், பண்​டைய பாரம்​பரிய​மாக​வும் இருந்து வரு​கிறது. இருப்​பினும், ரகு வம்​சத்​தின் சின்​ன​மான இந்த அரசக் கொடி நவீன இந்​தி​யா​வில் மறக்​கப்​பட்​டது. இந்த மரத்​தின் கொடி பற்றி லலித் மிஸ்ரா உள்​ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்​கள் ஆய்வு செய்​துள்​ளனர். தொடக்​கத்​தில் கச்​ச​னார் மரம்​தான், ரகு வம்ச மரம் எனக் கருதப்​பட்​டது. ஆனால் ஆராய்ச்​சிக்​குப் பிறகு அது, கோவி​தாரா என கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதன் காரண​மாகவே, ஸ்ரீ ​ராமஜென்​மபூமி கோயில் அறக்​கட்​டளை​யினர் இந்​தக் கொடியை ஏற்ற முடிவு செய்​துள்​ளனர். கோவி​தாரா மரத்​தின் படத்​துடன் சூரியன் மற்​றும் ஓம் சின்​னங்​களும் இந்​தக் கொடி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

இந்​தக் கொடியை அகம​தா​பாத்​தில் உள்ள ஒரு பாராசூட் தயாரிப்பு நிறு​வனம் வடிவ​மைத்​துள்​ளது. இதன் துணி நைலான் மற்​றும் பட்டு கலவை​யி​னால் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

ராமர் கோயில் பிராண பிர​திஷ்டை​யின்​போது, அதன் வளாகத்​தில் கோவி​தாரா மரங்​கள் நடப்​பட்​டன. அவை இப்​போது சுமார் 8 முதல் 10 அடி உயரம் வளர்ந்​துள்​ளன. கோவி​தாரா தொடர்​பான ஆராய்ச்​சி​யின்​படி, மந்​தாரை மரத்​தின் பண்​பு​களை பாரிஜாத மரத்​துடன் இணைத்து வளர்க்​கப்​பட்​டது.

முதல் கலப்​பின தாவர​மாகக் கருதப்​படு​கிறது. 15 முதல் 25 மீட்​டர் உயரம் வளரும் இந்த மரம், பூக்​கும் மற்​றும் பழம் தரும் மரமாகும். இது கச்​சனார் மரத்​தின் பூக்​களை ஒத்த ஊதா நிற பூக்​களைத் தரு​கிறது. இதன் பழம் சுவை​யாக​வும் சத்​தான​தாக​வும் கருதப்​படு​கிறது.

அயோத்தி ராமர் கோயில் காவிக் கொடியின் முக்கியத்துவம்
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in